Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெபூபா முப்தி காங்.,மூத்த தலைவர் சோனியாவை சந்தித்தார்.
நேற்று( ஏப்.18) டில்லியில் சோனியா இல்லம் சென்றிருந்த மெகபூபாப முப்தி, அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி, பா.,ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வலுவான கூட்டணி அமைக்க உள்ள நிலையில், சோனியாவை, மெகபூபா சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. காங்., கூட்டணியில் இணைய இந்தசந்திப்பு முன்னோட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.